Friday 15 May 2009

வன்னி நண்பனுக்கு ........


நான் இங்கு மகிழ்ச்சியாக வாழ்கிறேன்
நீ அங்கு மரணத்தில் வாழ்கிறாயா?
எனக்கு இங்கு உணவு உண்டு
உனக்கு அங்கு உணவு உண்டா ?
எனக்கு பெற்றோர் உள்ளனர் 
உனக்கு பெற்றோர் இருக்கிறார்களா?
நான் பாடசாலையில் கல்வி கற்கிறேன்
நீ அங்கு அகதி முகாமில் என்ன செய்கிறாய்?  

இங்கு என் காதில் பட்சிகளின் இன்னிசை கேட்கிறது
அங்கு உனது காதில் குண்டுகள் வெடிக்கும் ஓசையா கேட்கிறது? 
இங்கு எனக்கு சுதந்திரம் உண்டு
அங்கு உனக்கு சுதந்திரம் உண்டா? 

நான் பஞ்சு மெத்தை மீது உறங்குகிறேன்
நீ பதுங்கு குழியில் பதுங்கிக் கிடக்கிறாய்
நான் விமானத்தைக் கண்டவுடன்
மகிழ்ச்சியில் துள்ளிக் குதிப்பேன்

ஆனால் நீ விமானத்தைக் கண்டவுடன்
கையில் உயிரைப் பிடித்துக் கொண்டு
பதுங்கு குழிக்குள் ஓடி மறைகிறாய் .....

No comments:

Post a Comment